Wednesday, October 24, 2012
Tuesday, October 23, 2012
இலங்கை இராணுவத்திற்கு பாதுகாப்பு வழங்கும் முன்னாள் போராளிகள்!
By Winjaffna11:15 AMFeature, Liberation Tigers of Tamil Eelam, Popular, Popular Post, Sri LankaNo comments
Sunday, October 21, 2012
மீண்டும் நடிக்க வந்தார் குட்டி ராதிகா !
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை மணந்த குட்டி ராதிகா மீண்டும் நடிக்க வந்தார்.
இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா.
இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
சமீபத்தில் லக்கி என்ற படம் மூலம் தயாரிப்பாளராக திரையுலகிற்குள் நுழைந்தார்.
இதில் யாஷ், திவ்யா நடித்தனர்.இதையடுத்து சுவீட்டி நானா ஜோடி என்ற படத்தை தயாரிப்பதுடன் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ராதிகா நடித்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன.மீண்டும் நடிக்க வந்தது பற்றி ராதிகா கூறுகையில், படங்களில் கிளாமராக நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஆபாசமான உடை அணிய மாட்டேன். இந்த கட்டுப்பாடுகளுடன் படங்களில் நடிக்கிறேன்.இப்படத்தில் ஆதித்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே அவருடன் நான் நடித்திருக்கிறேன். தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது என்றார்.
இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா.இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
சமீபத்தில் லக்கி என்ற படம் மூலம் தயாரிப்பாளராக திரையுலகிற்குள் நுழைந்தார்.
இதில் யாஷ், திவ்யா நடித்தனர்.இதையடுத்து சுவீட்டி நானா ஜோடி என்ற படத்தை தயாரிப்பதுடன் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ராதிகா நடித்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன.மீண்டும் நடிக்க வந்தது பற்றி ராதிகா கூறுகையில், படங்களில் கிளாமராக நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஆபாசமான உடை அணிய மாட்டேன். இந்த கட்டுப்பாடுகளுடன் படங்களில் நடிக்கிறேன்.இப்படத்தில் ஆதித்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே அவருடன் நான் நடித்திருக்கிறேன். தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது என்றார்.பற்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள்!
பற்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் பற்கள் நன்கு சுத்தமாக இருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பிரஷ் பண்ண வேண்டும்.
இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம், பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்ளுதல், சொத்தை பற்கள் ஏற்படுதல் போன்றவை ஏற்படாமல் இருப்பதோடு, பற்களும் வெள்ளையாக பளிச்சென்று இருக்கும்.
பொதுவாக பற்களில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளே காரணங்களாகின்றன. அதிலும் அவற்றை உண்பதால் பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதோடு, பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் சிக்கிக் கொண்டு பற்களை சொத்தையாகவும், துர்நாற்றம் உள்ளதாகவும் மாற்றுகிறது.
ஆகவே அத்தகைய உணவுகளை உண்ட பின், பற்களில் மாட்டிக் கொள்ளும் உணவுப் பொருட்களை நீக்க டூத் பிக் அல்லது டென்டல் ப்ளாஸ் பயன்படுத்துவது நல்லது.சீஸ்
உணவுகளில் வித்தியாசமான சுவைக்காக சேர்க்கும் பால் பொருட்களில் ஒன்று தான் சீஸ். இதனை சேர்ப்பதால் அந்த உணவை சாப்பிடும் ஆர்வம் அதிகரிக்கும்.
அவ்வாறு சேர்க்கும் சீஸை சாப்பிடும் போது அவை பற்களில் சிக்கிக் கொண்டு, பற்களை சொத்தை ஆக்குவதோடு, வாய் துர்நாற்றத்தையும் உண்டாக்குகிறது.
சொக்லேட்
அனைவருக்குமே சொக்லேட் மிகவும் பிடிக்கும். சொக்லேட் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அதில் உள்ள இனிப்பு பற்களில் கிருமிகள் மற்றும் பக்டீரியாக்களை தங்க வைக்கும்.
ஆகவே அதனை தொடர்ந்து அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அதை சாப்பிட்டப் பின் பற்களை மறக்காமல் பிரஷ் செய்துவிட வேண்டும்.
பாப்கார்ன்
பாப்கார்ன் பற்களுக்கிடையே மாட்டிக் கொள்ளும். அதனை நீக்குவது என்பது கடினமானது. ஆகவே அதனை நீக்க டென்டல் ப்ளாஸ் (dental floss) தான் பயன்படுத்த வேண்டும்.
பிரட்
அதிகமான அளவு நார்ச்சத்து நிறைந்துள்ள பிரட் கூட பற்களில் மாட்டும் உணவுப் பொருட்களில் ஒன்று. இது வறட்சியுடன் இருப்பதால், ஈறுகளில் மாட்டிக் கொண்டு, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
நூடுல்ஸ்
நூடுல்ஸ் என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். இதனை எந்த நேரத்தில் கொடுத்தாலும் சாப்பிடுவோம். அத்தகைய நூடுல்ஸ் கூட பற்களில் மாட்டிக் கொண்டு, நீண்ட நேரம் இருந்தால் பக்டீரியாவை அதிகரிக்கும்.
இறைச்சி
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் இறைச்சியை நன்கு கடித்து இழுக்கும் போது, அதில் உள்ள சிறிய பகுதி கண்டிப்பாக பற்களில் மாட்டிக் கொள்ளும்.
அவ்வாறு மாட்டிக் கொள்வதை நீக்க முடியாமல் இருக்கும். மேலும் அவை பற்களில் இருப்பதால், அதிக எரிச்சலை ஏற்படுத்தும்.
ஆகவே எப்போது அதனை சாப்பிட்டாலும், டென்டல் ப்ளாஸை பயன்படுத்துவது நல்லது.


















