யாழ்.பாடசாலை மாணவர்களுக்கு ஹரோயின் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் பிரதான முகவர் ஒருவரை நேற்று யாழ்.நகர் கொட்டடி
பகுதியில் வைத்து யாழ். பொலிஸார் கைது செய்ததாக யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேர தெரிவித்துள்ளார்
கைது செய்யப்பட்டவரிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நாளை திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்.பாடசாலை மாணவர்கள் ஹெரோயின் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த தகவலின் அடிப்படையில் யாழ். நகரில் உள்ள வீடொன்றில் வைத்து 8 மாணவர்களை யாழ். பொலிஸார் கைது செய்தனர். அதன் பின்னர் மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இம் மாணவர்கள் 10 பேரும் ஆரம்ப விசாரணைகளின்பின் யாழ்.மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போது ஐந்து மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் ஏனைய 5 மாணவர்களும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விசாரணைகளின் அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருட்களை விநியோகித்த பிரதான முகவரை நேற்று கொட்டடியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment