Tuesday, July 30, 2013

ஆபாசம் தொடர்பான விடயங்கள் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி???

இப்போது தேடுதல் என்பதற்கு மறு பெயராக குறிப்பிட கூடியது கூகிள் தேடுதளம் இந்த தளத்தில் நாம் தேடும் போது தவறுதலாக ஆபாச படங்கள் வந்து சேர்ந்துவிடும் இதை தடுப்பதற்கு கூகிள் ஒரு வசதியை தந்துள்ளது. இந்த வசதி எவ்வாறு இயக்கப்பட வேண்டும் என்பதை பார்ப்போம் ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..? நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

ஆமையை பிரசவித்த அதிசய பெண் – அதிர்ச்சி படம்...


உலகில் எத்தனையோ விதமான நம்பமுடியாத அதிசயமான உண்மைகள் இடம்பெறுகின்றன.இருந்தபோதிலும் சில சம்பவங்களை நாம் இணையங்களின் மூலம் அறிகின்ற போது அவற்றின் உண்மைத்தன்மைய 100 வீதம் உறுதிப்படுத்த முடிவதில்லை என்பது ஒருபுறம் இருக்க நம்பமுடியாத பல விசித்திரங்கள் உலகில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதும் நாம் நம்பியாகவேண்டிய உண்மை. இன்று புதியஉலகம் இணையத்தில் நீங்கள் பார்க்க இருக்கும் ஒரு விசித்திர தகவல் உண்மையில் நம்ப மறுக்கும் இயற்கைக்கு புறம்பான ஒரு தகவலே.
பல ஆங்கில இணையத்தளங்களில் வெளிவந்து சர்ச்சையை கிளப்பிய ஒரு செய்தியே இது. இதன் உண்மைத்தன்மை பற்றி புதியஉலகம் குழுமம் உறுதிப்படுத்த முடியவில்லை எனினும் அத்தளங்களில் வெளிவந்த செய்தியினை உங்களுக்கு அப்படியே தருகிறோம். அந்த ஆச்சரியமூட்டும் செய்தி என்ன என்பதை தலைப்பை பார்த்து புரிந்துகொண்டிருப்பீர்கள். ஆம் ஒரு பெண் சாதாரணமா குழந்தையை பிரசவிப்பாள் ஆனால் இங்கு ஒரு ஆமையை பிரசவித்திருக்கிறாள் என்பதே அந்த அதிர்ச்சி செய்தி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சில ஆங்கில இணையங்களில் வெளிவந்த அச்செய்தி மேலும் குறிப்பிடுகையில்:-
20 வயதான ரசீதா ரைமி எனப்படும் குறித்த பெண் 10 மாதங்கள் கர்ப்பமுற்றிருந்த நிலையில் ஒரு குழந்தையை பிரசவித்திருக்கிறாரள். இதோடு சேர்ந்து ஒரு ஆமை ஒன்றையும் பிரசவித்திருக்கிறாள். லாகோஸ் புறநகர்பகுதியில் வசிக்கும் குறித்த பெண் ஆமையுடன் சேர்த்து ஒரு குழந்தையினையும் தேவாலய பூஜை ஒன்றுக்கு சென்று அங்கு பிரார்த்தனையில் இருக்கும் போதே அதிக வலி ஏற்பட்டு இவ் அதிசய நிகழ்வு இடம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்தபெண் பிரசவத்திற்கு முன்னர் பலமுறை டாக்டர்களிடம் மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தபோது மருத்துவர்கள் குழந்தைபற்றிய தகவல்களை மட்மே வழங்கியதாகவும் வயிற்றில் வித்தியாசமான வேறு எந்த விடயங்களோ காணப்படுவதாக குறிப்பிடவில்லை எனவும் குறிப்பிட்டார். எனினும் தான் பின்னர் தேவாலயத்தில் பிரார்த்தனையில் இருக்கும் போது வலி ஏற்பட தான் வயிற்றில் விசித்திரமான ஒரு அசைவை உணர்ந்ததாகவும் தான் அது ஒரு பல்லியாக உணர்ந்ததாகவும் சம்பவம் தொடர்பாக குறித்த பெண் விபரித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வலி அதிகரித்து தொப்புள் கொடியினை அறுத்துக்கொண்டு முதலில் ஆமைதான் வெளியில் வந்து விழுந்ததாகவும் பின்னரோ குழந்தை பிறந்ததாகவும் தொடரும் அச்செய்தி இயற்கைக்கு மாறாக நடைபெறும் எத்தனையோ சம்பவங்களை விஞ்ஞானமோ தொழில்நுட்பமோ இன்னும் கண்டுபிடிக்கமுடியாமல் உள்ளது. எனவே விஞ்ஙானத்தினையும் மீறிய சில அதிசயங்கள் இடம்பெறுவதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும் என்கிறது அச்செய்தி.
(copied from puthiyaulakam.com)
WOMAN-DELIVERS-A-TORTOISE

40,000 ரூபாயில் ஹெலிகாப்டர்....இந்திய மெக்கானிக் சாதனை !!!


ஒரிசாவை சேர்ந்த அபுமன்யூ சமால் (Abhmanyu Samal) என்னும் இவர் தனியாளாக ஒரு ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ளார்...இவருக்கு வயது 40. இவர் ஒரு மெக்கானி.. இரண்டு வருட கடின உழைப்பில் இதனை உருவாக்கியுள்ளார்...இதற்காக இவர் செய்த செலவு வெறும்40,000 மட்டுமே..இருசக்கர வாகனத்திற்கு பயன்படும் இஞ்சினை இதில் பயன்படுத்தியுள்ளார்...இதன் எரிபொருள் கொள்ளளவு 5 லிட்டர்...இதன் வேகம் 120கி/மஇவரை போன்ற திறமைசாளிகளை வெளிகொண்டுவந்துஊக்குவித்தால்....கோடி கோடியாய் ஊழல் செய்து வெளிநாட்டிலிருந்து ஹெலிகாப்டர் வாங்க தேவையில்லை....நாமே செய்துவிடலாம்... அவனைவிட தரமாக...திறமைசாளிகளுக்கு பாரதத்தில் என்றுமே பஞ்சமில்லை...அதற்கு ஓர் சிறந்த உதாரணம் இந்த விஞ்ஞானி...

2015 உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு...

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. 2011–ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டியை இந்தியா, இலங்கை, வங்காள தேசம் ஆகியவை இணைந்து நடத்தியது. இதில் இலங்கை அணியை வீழ்த்தி டோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது.

2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 23 ஆண்டுக்கு பிறகு அங்கு உலக கோப்பை போட்டி நடக்கிறது. 1992–ம் ஆண்டு நடந்த அந்த உலக கோப்பை போட்டியில் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.
பிப்ரவரி 14–ந்தேதி போட்டி தொடங்குகிறது. மார்ச் 29–ந்தேதி வரை உலக கோப்பை போட்டி நடக்கிறது. இந்தப்போட்டியில் 14 நாடுகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் (‘பி’ பிரிவு) இடம் பெற்று உள்ளன.
இரண்டு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் வருமாறு:–
‘ஏ’ பிரிவு:- இங்கிலாந்து, ஆஸ்திரேலியா (போட்டியை நடத்தும் நாடு), இலங்கை, வங்காளதேசம், நியூசிலாந்து (போட்டியை நடத்தும் நாடு), குவாலிபையர் 2, குவாலிபையர் 3.
‘பி’ பிரிவு:– தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, குவாலிபையர் 4.
தகுதி சுற்று போட்டியில் இருந்து 3 அணிகள் தகுதி பெறும்.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் இரண்டு பிரிவில் இருந்தும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.
உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட் சர்ச்சில் நடக்கிறது. இதில் இலங்கை– நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பகல் ஆட்டமாக இந்தப் போட்டி நடக்கிறது. அதே தினத்தில் (பிப்ரவரி 14) ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து– ஆஸ்திரேலியா மோதுகின்றன. பகல்– இரவாக இந்த ஆட்டம் நடக்கிறது.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பரம்பரை எதிரியான பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்த ஆட்டம் பிப்ரவரி 15–ந்தேதி அடிலெய்டுவில் நடக்கிறது. அதை தொடர்ந்து 22–ந்தேதி தென்ஆப்பிரிக்க அணியை சந்திக்கிறது.
4 கால் இறுதி ஆட்டங்களில் 3 போட்டி ஆஸ்திரேலியாவிலும் (சிட்னி, மெல்போர்ன், அடிலெய்டு), ஒரு போட்டி நியூசிலாந்திலும் (வெலிங்டன்) நடக்கிறது. முதல் அரை இறுதி ஆட்டம் மார்ச் 21–ந்தேதி ஆக்லாந்திலும், 2–வது அரை இறுதி ஆட்டம் மார்ச் 26–ந்தேதி சிட்னியிலும் நடக்கிறது. இறுதிப்போட்டி மார்ச் 29–ந்தேதி மெல்போர்னில் நடக்கிறது.

Tuesday, July 23, 2013

நீண்ட இடைவேளைக்கு பின்பு தமிழ் படத்தில் கே.ஆர்.விஜயா

HTC அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

 முன்னணி கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான HTC ஆனது தனது புதிய உற்பத்தியான HTC One Max Cloned எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தவுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.3 அங்குல அளவுடைய தொடுதிரையைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 1.2GHz Quadcore MediaTek Processor, பிரதான நினைவகமாக 1 GB RAM ஆகியனவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. இவற்றுடன் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக 2 கெமாபிக்சல்களை உடைய துணைக் கமெரா ஆகியனவும் இணைக்கப்பட்டுள்ளன. 250 டொலர்களே பெறுமதியான இக்கைப்பேசியுடன் 3,050 mAh மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.