ஒஸ்தி படத்தினை தொடர்ந்து போடா போடி,வேட்டை மன்னன், வட சென்னை என பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு.
உலக மக்கள் அனைவருமே பரஸ்பரம் அன்பு செலுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆல்பம் ஒன்றை தயாரித்தார். இப்பாடலை சிம்பு எழுதி இசையமைத்தார்.
அமெரிக்காவில் உள்ள எலன் மொரிசனுடன் இணைந்து இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார்.
ஆல்பம் பணிகளின் தொடர்புகளால் பல்வேறு வெளிநாட்டு இசை கலைஞர்களுடன் நட்பு பாராட்டி வருகிறார் சிம்பு.
இதனையடுத்து போடா போடி திரைப்படத்திற்கு பாடுவதற்காக சர்வதேச பாடகியான ஷகீராவை அழைத்து வர சிம்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.











0 comments:
Post a Comment