Wednesday, October 2, 2013

விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடக்கும் 1.69 லட்சம் கோடி ரூபாய்...

ரஷ்ய விமான நிலையத்தில் கேட்பாரற்று கடந்த 6 ஆண்டுகளாகக் கிடக்கும் சுமார் 1.69 லட்சம் கோடி ரூபாய் சதாம் உசேனுக்கு சொந்தமானதா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. 

2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி பிராங்பர்ட் என்னும் இடத்திலிருந்து மாஸ்கோவிற்கு அனுப்பப்பட்ட சுமார் 1.69 லட்சம் கோடி ரூபாய் ரஷ்ய விமான நிலையத்தில் கேட்பாரற்று கடந்த 6 ஆண்டுகளாக இருக்கின்றது.

கோப்புகளில் இந்த பணத்தின் உரிமையாளர் ஈரானை சேர்ந்த 45 வயது நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், இந்த பணம் சதாம் உசேனுக்கு சொந்தமானதா? என்ற சந்தேகத்தை இங்கிலாந்து பத்திரிகை ஒன்று கிளப்பியுள்ளது.



0 comments:

Post a Comment