Saturday, September 21, 2013

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் கூட்டமைப்பு வெற்றி ...4 ஆசனங்களை கைப்பற்றியது...


முல்லைத்தீவு மாவட்டத்துக்கான முழுமையான வாக்களிப்பு முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றின்படி 

தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்ற வாக்குகள்- -28266
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற வாக்குகள்-1099

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற வாக்குகள்-199
ஐக்கிய தேசிய கட்சி-197

பதிவுசெய்யப்பட்ட  மொத்த வாக்குகள் -53683
வாக்களிக்கப்பட்டவை -38802
நிராகரிக்கப்பட்டவை -2820
ஏற்றுக்கொள்ளப்பட்டவை -35982

தமிழ் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட ஆசனங்கள் -4
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற ஆசனங்கள் -1

மன்னார் மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகள்...


மன்னார் மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகள்.
இலங்கை தமிழரசு கட்சி -1300
ஐக்கிய  மக்கள் சுதந்திர முன்னணி-408
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-135
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள்-1917
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்-1869
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்-17
ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகள்-1852

யாழ்மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்...



யாழ்மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்.


தமிழ் தேசிய கூட்டமைப்பு -7625
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -1099
பதிவுசெய்யப்பட்ட  வாக்குகள் -9301
வாக்களிக்கப்பட்டவை -8941
நிராகரிக்கப்பட்டவை -114
ஏற்றுக்கொள்ளப்பட்டவை -8335

வவுனியா மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகள்


வடமாகாணம் வவுனியா மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வாக்குகள்-901,
இலங்கை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகள்-323,
ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகள்-25,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட வாக்குகள்-24

கிளிநொச்சி மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில்...



கிளிநொச்சி மாவட்ட தபால் மூல வாக்களிப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வாக்குகள்- 756, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகள்-160, ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகள்-1. செலுத்தப்பட்ட மொத்த வாக்குகள்- 929. செல்லுபடியான வாக்குகள் -919. நிராகரிக்கப்பட்டவை -10. முல்லைத்தீவு மாவட்ட தபால் மூல வாக்களிப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில்  இருப்பது குறிப்பிடத்தக்கது.



தலைமுடி உதிர்கின்றதா ஐடியா இதோ...


தலைமுடியைப் பற்றி மிகவும் இளக்காரமாக நினைப் பவர்கள் நாம். 'வந்தால் மலை, போனால் மயிர்' என்கிற மாதிரி பல பழமொழிகள் நம்மிடையே வழக்கத்தில் உண்டு. ஆனால், உண்மை நிலவரம் என்ன? முப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது.


முடி கொட்ட ஆரம்பித்துவிட்டால், கத்த ஆரம்பித்து விடுகிறார்கள். தலைமுடி ஏன் உதிருகிறது? முடி விடயத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும்? அதைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

நம் உடம்பில் ஐந்து மில்லியன் முடிகள் உள்ளன. தலையில் மட்டும் எண்பதாயிரம் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் உள்ளன. புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின் என்கிற மூலப்பொருள்தான் முடிகள் வளர்வதற்குக் காரணமாக இருக்கிறது. புரோட்டின் சத்து குறைந்தால், முடி அதிகமாக உதிரும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.

யூமெலானின் (eumelanin) என்கிற பொருள்தான் நம் தலைமுடி கறுப்பாக இருப்பதற்குக் காரணம். பொமேலானின் (Pheomelanin) என்கிற பொருள் அதிகமாக இருந்தால், தலைமுடி செம்பட்டையாக இருக்கும். நம் உடம்பில் எத்தனை முடி இருக்கிறதோ, அவற்றுக்கான அடித்தண்டு (follicies), தாயின் வயிற்றில் இருக்கிற போதே தோன்றி விடுகிறது. பிறப்பிற்குப்பின் புதிய முடி வளர்வதற்கான அடித்தண்டு எதுவும் தோன்றுவதில்லை.

ஒவ்வொரு அடித்தண்டிலும் இருபது முதல் முப்பது முறை முடி வளரும். ஒருமுறை முடி வளர்ந்தால், மூன்றிலிருந்து ஐந்து வருடம் வரை இருக்கும். தலையில் வளரும் முடி ஒரு மாதத்துக்கு அரை இன்ச் என்கிற ரீதியில் வளரும். வெயில் காலத்தில் வேகமாக வளரும். தலைமுடியின் வளர்ச்சி பதினைந்திலிருந்து முப்பது வயதுக்குள் அதிவேகமாக இருக்கும்.

ஒரு மாத காலத்துக்குள் ஐம்பதிலிருந்து நூறு முடி உதிர்ந்தால், அது சாதாரண விடயம்தான். அதனால் ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை. இதேபோல தலைவாரிக் கொள்கிற நேரத்தில் 15, 20 முடிகள் உதிரலாம். பெண்கள் குளிக்கும் போது முப்பது முடிவரை உதிரலாம். தலைவாரிக் கொள்ளும்போது 40 முதல் 60 முடிகள் உதிரலாம்.

தலைமுடி உதிருவதில் மூன்று முக்கியமான நிலைகள் உண்டு. முதலாவது, அனெகன். இந்த நேரத்தில் முடியின் அடித்தண்டு நம் உடம்பில் நன்றாகக் காலூன்றி வளரும். இரண்டாவது நிலை, கேடகன் நன்கு வளர்ந்த முடி அதற்கு மேலும் வளராமலும், விழவும் முடியாத நிலையில் இருக்கும். மூன்றாவது, டெலகன். நன்கு வளர்ந்த முடி கீழே விழுந்த பருவம்தான் இந்த நிலை.

தலைமுடி இழப்பில் இருபதுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. எனினும், மூன்று முக்கியமான வகைகளை மட்டும் விளக்கமாகச் சொல்கிறேன்.

1. ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை.

2. பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை.

3. அலோபேசியா ஏரியாட்டா.






ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை:

ஆன்ட்ரியோஜெனிக் அலோபேசியா என்று இதற்குப் பெயர். முப்பதிலிருந்து ஐம்பது சதவிகித ஆண்களுக்கு முப்பது முதல் ஐம்பது வயது வரை உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. வழுக்கை பரம்பரையாக ஏற்படுவது என்பது தவறான கருத்து. இதற்கு ஐம்பது சதவிகித வாய்ப்புகளே உண்டு. தலையில் ஏற்படும் பொடுகினாலும் தலைமுடி பலமிழந்து போகலாம்.

மனஉளைச்சல் காரணமாகவும் தலைமுடி சரமாரியாக விழலாம். மஞ்சள் காமாலை, மலேரியா, டைபாயிட் போன்ற நோய்கள் வந்தாலும் தலைமுடி உதிரும். சிகரெட் பிடிப்பதும், தலைமுடி உதிர்வதற்கு ஒரு முக்கியமான காரணம். கைகால் வலிப்பு நோய்க்கான மருந்துகளைச் சாப்பிடும்போது, உயர் ரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரைகளைச் சாப்பிடும்போது, சில வகையான நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மாத்திரைகளை சாப்பிடும்போதும் தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும்.

சுடவைத்த தண்ணீரில் குளிப்பதாலும், தலையில் கண்டபடி டை அடிப்பதாலும்கூட முடிகள் உதிரலாம்.

நம் ரத்தத்தில் டிஹெச்டி என்று ஒரு பொருள் இருக்கிறது. இது ரத்தத்தில் அதிகமானால், முடி கொட்ட ஆரம்பிக்கும் என்று எல்லா மருத்துவர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.







பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை:

பெண்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால்தான் தலைமுடி நிறைய கொட்டும் வாய்ப்பு உண்டு. பெண்கள் பூப்படைந்தவுடன், அதாவது 12 முதல் 14 வயதுக்குள் நிறைய தலைமுடி இழக்கலாம்.

பிரசவம் முடிந்த சில மாதங்களுக்குள் நிறைய தலைமுடி கொட்டலாம். நாற்பத்தைந்து வயதில் மாதவிடாய் நிற்கிறபோதும் தலைமுடி உதிரலாம் சில பெண்களுக்கு தைராய்டு சம்பந்தமான பிரச்னை உருவாகும்போதும் முடி உதிரலாம். இன்னும் சில பெண்களுக்கு 'ஓவரி'யைச் சுற்றி ஏற்படும் நோய்களாலும், அதனால் ஏற்படும் ஹார்மோன் அதிகமாகவோ, குறைவாகவோ சுரப்பதாலும் முடி உதிரலாம்.

ஊட்டச்சத்து குறைவாக இருக்கும்போது, முடி உதிர்கிறது. உதாரணமாக, நம் ரத்தத்தில் இரும்புச் சத்து குறைந்தால், முடி அதிக அளவில் உதிரும். பெண்களுக்கு ஹேமோகுளோபின் எண்ணிக்கை பன்னிரண்டோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்க வேண்டும்.

கர்ப்பத் தடை மாத்திரைகளைச் சாப்பிடுகிற போதும், பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படலாம். நகர்ப்புறங்களில் குறிப்பிட்ட சில உணவு வகைகளையே மீண்டும் மீண்டும் சாப்பிடுவதனால், சில வகை சத்துகள் குறைந்துவிடுகின்றன. இதனாலும் முடி உதிர்கிறது.

அலோபேசியா ஏரியாட்டா:


வழுக்கைகளிலேயே மிக ஆச்சரியமான விடயங்களை உள்ளடக்கியது அலோ பேசியா ஏரியாட்டா என்கிற வழுக்கைதான். இளம் பருவம் முதல் எண்பது வயதுக்குள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். தலையில் மட்டுமல்ல, உடம்பின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். தலையில் உள்ள முடி அதிவேகத்தில் உதிர ஆரம்பிக்கும். பதினைந்தே நாட்களுக்குள் தலை சொட்டை ஆகிவிடும்.

இப்படி திடீரென முடி உதிர்வதற்கான காரணம் வேடிக்கையானது. நம் உடம்பிற்குத் தேவையில்லாத, கெடுதல் தரக்கூடிய பாக்டீரியாக்கள் நம் உடம்பிற்குள் நுழைந்து விட்டால், அதை அழித்துவிடுவது நம் உடலின் இயற்கையான அமைப்பு. உதாரணமாக, நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள் நமக்குள் புகுந்தால், அதைக் கொல்வது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் வேலை. ஆனால், சில சமயங்களில் நம் உடலில் உள்ள முடிகள் தேவையில்லாதவை, அவற்றை இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்று நம் உடல் தவறாக நினைப்பதால், நம் உடலில் உள்ள முடிகள் எல்லாம் உதிர்ந்துவிடுகின்றன.

தலைமுடி மீண்டும் வளர...


வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும். முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும். தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும். முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும். காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.


வெளியாகியது ஐபோன் 5S, 5C...



அப்பிள் நிறுவனமானது தனது ஐபோன்  வரிசையின் அடுத்த ஸ்மார்ட் போனை நேற்று அறிமுகப்படுத்தியது.இறுதியாக வெளியாகியிருந்த ஐபோன்5 வின் தொடர்ச்சியாக ஐபோன் 5எஸ் நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்து வைக்கப்பட்டது.எனினும் ஐபோன் 5எஸ் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் மேற்படி நிகழ்வில் அனைவரது கவனத்தினையும் வேறொன்று ஈர்த்திருந்தது.ஆம், நீண்ட நாட்களாக வெளியாகும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த குறைந்த விலை ஐபோன் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
முற்றிலும் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்டுள்ள இது 3 ஆம் தர பாவனையாளர்களை இலக்குவைத்து வெளியாகியுள்ளது.




ஐபோன் 5எஸ்

அப்பிளின் கடைசி வெளியீடான ஐபோன்5 இன் அடுத்த வெளீயீடாக வெளியாகியுள்ளது.
தங்க நிறம் மற்றும் சில்வர் மற்றும் ஸ்லேட் நிறத்தில் கிடைக்கின்றது.
வேகமாக இயங்கக்கூடிய A7 சிப்பினை கொண்டுள்ளதுடன் இது ஐபோன்5 வினை விட இரு மடங்கு வேகமானதென அப்பிள் தெரிவிக்கின்றது.
4 அங்குல ரெட்டினா திரையையும், 8 MP, 3264x2448 pixels கெமரா, 1080p HD வீடியோ ரெக்கோர்டிங், ஐபோன்5எஸ் கொண்டுள்ளது.
அப்பிளின் புதிய இயங்குதளமான ஐ.ஓ.எஸ். 7 மூலம் இது இயங்குகின்றது.
இதில் முக்கியமாக குறிப்பிடத்தக்க விடயமென்னவெனில் விரல் ரேகையை வைத்து போனிற்குள் நுழையக்கூடிய பிங்கர்பிரிண்ட் ஸ்கேனரைக் கொண்டுள்ளது. இது போனுக்கு சிறப்பான பாதுகாப்பை அளிப்பதாக அப்பிள் தெரிவிக்கின்றது.
இதன் விலை £549 -16GB , £709 - 64GB ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





ஐபோன் 5சி

நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த மாதிரியாக இதனைக் கருதமுடியும். பல காலமாக வதந்தியாகவே கருதப்பட்டு வந்த இது நேற்று ஊர்ஜிதமாகியது.
பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டுள்ள இது பிங்க், பச்சை, வெள்ளை, நீலம், மற்றும் மஞ்சள் நிறங்களில் இது கிடைக்கப்பெறுகின்றது.
இதுவும் 4 அங்குல ரெட்டினா திரையைக் கொண்டுள்ளது. A6 புரசசர் , 8 மெகா பிக்ஸல் கெமரா, புதிய பேஸ்டைம் எச்.டி. கெமரா போன்ற வசதிகளை இது கொண்டுள்ளது.
'இதன் விலை £469 - 16GB , £549 -32GB ஆகும்.




முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பில் தமிழ் கூட்டமைப்பு முன்னணியில்...


தபால் மூல வாக்களிப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு- 646 வாக்குகளையும்,

ஐக்கிய சுதந்திர மக்கள் முன்னணி- 146 வாக்குகளையும்
ஐக்கிய தேசிய கட்சி- 2 வாக்குகளையும் பெற்றுள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் அறிவுத்துள்ளது.

வாக்குச்சாவடியில் குளவிக் கூடு...


வவுனியா பட்டானிச்சூர் முஸ்லிம் மகா வித்தியாலய வாக்குச் சாவடிக்கு அண்மையில் இருந்த குளவிக்கூடு ஒன்று இன்று அதிகாலை அகற்றப்பட்டது.

ஏற்கனவே புதுக்குளம் மகா வித்தியாலய வாக்குச் சாவடியில் குளவி தீண்டியதில் ஒரு அதிகாரி மரணமடைந்ததுடன் இருவர் காயமடைந்ததிருந்தனர்.
இதனை அடுத்து மற்றுமொரு ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் வவுனியா அரச அதிபரின் உத்தரவின் பேரில் மலேரியா ஒழிப்புப் பிரிவினர் மேற்படி குளவிக் கூட்டை அகற்றியதாக அப்பிரிவின் பொறுப்பதிகாரி கோபிநாத் தெரிவித்துள்ளார்.

Friday, September 20, 2013

அனந்தி அரசாங்கத்துடன் இணைந்ததாக போலியான உதயன்பத்திரிகை அச்சிட்டு வினியோகம்- அனந்தியின் குரல் இணைப்பு.

அரசபடைகளதும் புலனாய்வளரகளதும் போக்கிலித் தனமும் தேர்தல் முறைகேடுகளும் -
அனந்தி அரசாங்கத்துடன் இணைந்ததாக போலியான உதயன்பத்திரிகை அச்சிட்டு வினியோகம்- அனந்தியின் குரல் இணைப்பு
இன்று காலை  அரசாங்கத்தினாலும் அவர்களின் படையினராலும் அச்சிடப்பட்ட போலியான உதயன் பத்திரிகையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளரின் மனைவிஅனந்தி எழிலன் அரசாங்கத்துடன் இணைந்ததாக செய்தி வெளியிடப்பட்டு அனைவரது வீட்டு வாசலிலும் பத்திரிகை விநியோகிக்கப்பட்டு உள்ளது. 
பொய்யான பத்திரிகையை படையினர் விநியோகித்து சென்றவுடன் உண்மையான பத்திரிகை வெளிவந்த நிலையில் குடாநாட்டு மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதனால் தான் அரசாங்கத்துடன் இணைந்துள்ளதாக படைப்புலனாய்வாளர்களால் திட்டமிட்டு பரப்பப்பட்ட செய்தி யை அனந்தி மறுத்ததுடன் உதயன் பத்திரிகை நிறுவனமும் தாம் இந்த பத்திரிகையை விநியோகிக்கவில்லை என மறுத்துள்ளது.

MS Officeஐ இனி Android கைபேசிகளிலும் பயன்படுத்தலாம்...



Friday, September 6, 2013

ஓமந்தையிலிருந்து கிளிநொச்சிக்கான ரயில் வெள்ளோட்டம்.


ஓமந்தையிலிருந்து கிளிநொச்சிக்கான ரயில் சேவை எதிர்வரும் 14 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கவிருக்கின்ற நிலையில் பரீட்சார்த்த பயணமொன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

மணித்தியாலயத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்திலேயே இந்த பரீட்சார்த்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பயணத்தில் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம, ரயில்வே பொது முகாமையாளர் டீ.ஏ.பி.ஆரியரத்ன மற்றும் வடக்கு ரயில் பாதை நிர்மாணப்பணிக்கு பொறுப்பான இந்தியாவின் ஐகோன் நிறுவனத்தின் இலங்கை முகாமையாளர் எஸ்.எல்.குப்தா உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோரும் இந்த பயணத்தில் இணைந்துகொண்டனர்.

இந்த பயணத்தில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோரும் இணைந்துகொண்டனர்.


Wednesday, September 4, 2013

தூக்குக் காவடி எடுத்து வந்த இளைஞன் மயங்கி விழுந்தார் : யாழில் சம்பவம்!


கோவிலுக்கு நேர்த்திக் கடனுக்காக தூக்குக் காவடி எடுத்த இளைஞர்; மயக்கமுற்ற நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்று பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். பன்னாலை பிள்ளையார் ஆலயத்திற்கு நேர்திக் கடனுக்காக தூக்குக் காவடி எடுத்துச் சென்ற சண்முகலிங்கம் கோகுலன்(வயது26) என்பவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆலயத்திற்கு தூக்குக் காவடியுடன் சென்ற குறித்த இளைஞன் காவடியிலிருந்து இறக்கப்பட்ட பின்னர் மயக்கமுற்று வீழ்ந்ததாகவும் இதனையடுத்து அவர் மயக்கமுற்ற  நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் கைது!


ராயனூர் இலங்கைத் தமிழர் முகாமில், சிறுமியொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் பாடசாலை மாணவனொருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

ராயனூர் இலங்கைத் தமிழர் முகாமில் இடம்பெற்றுள்ள இரண்டாம் சம்பவம் இது என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் ராயனூர் இலங்கை தமிழர் முகாமைச்சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், அதே முகாமை சேர்ந்த 7 வயது சிறுமியை தனியாக அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி, தனக்கு நேர்ந்ததை பாட்டியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, சிறுமியின் உறவினர், கரூர் மகளிர் பொலிஸில் புகார் அளித்தார். அதன்படி, 2012 ஆம் ஆண்டு குழந்தை பாதுகாப்பு மற்றும் பாலியல் கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட மாணவனை பொலிஸார், நேற்று கைது செய்தனர்.

கடந்த 27 ஆம் திகதி அதே இலங்கைத் தமிழர் முகாமில், 14 வயது சிறுமியை வன்புணர்ந்ததாக இரண்டு சிறுவர்களை பொலிஸார் கைது செய்தனர். இந்நிலையில், அதே முகாமில் பாலியல் தொல்லை தொடர்பாக மாணவனொருவன் கைது செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.