Sunday, July 29, 2012

பெற்ற குழந்தையை கொடுரமாக சாப்பிடும் மனிதன் !

தப்புவில் நகரத்தின் மேற்கு மாகாணத்தில் சுரங்க பகுதிகளில் வசிக்கும் குடியேற்ற வாசிகள் மாந்திரீக விழாக்களை கொண்டாடுவது வழக்கம். இவ்வாறு மாந்திரீக விழா கொண்டாடும்போது அண்மையில் அங்கு வசிக்கும் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை மிகவும் கொடுரமான முறையில் கடித்து சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்வம் பற்றி மேலும் தெரியவருவதாவது:“பப்புவா, நியுகினியா சுரங்க குடியேற்ற வாசிகளால் இவர்கள் அண்மையில் மாந்திரீக விழா தொடங்கப்பட்டது. இதில் மாந்திரீகத்தில் மிக்க நம்பிக்கை உடைய ஒருவர் மிகவும் கொடுரமான ஒரு செயலை புரிந்துள்ளார். அவரது சொந்த மகனையே மிகவும் கோரத்தனமாக கடித்துக்குதறி சாப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த கிராம வாசிகள் அலறியடித்துக்கொண்டு பொலீசாரை வரவழைத்துள்ளனர்.
பொலீசார் மிகுந்த போராட்டத்தின் பின்னர் குறிதத்த நபர் உட்பட அவரது மனைவியையும் கைது செய்துள்ளர். எனினும் மிகுந்த காயங்களுக்கு உள்ளான குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என பொலீசார் தெரிவித்தனர். மற்றும் இது ஒரு சங்கடமான சம்பவம் எனவும் மாந்திரீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மிகுந்த பயத்துடனும், கவலையுடனும் வாழ்வதாகவும் குறிப்பிட்டனர்.

Recycle பின்லிருந்து Delete செய்த கோப்புகளை எப்படி மீட்டெடுப்பது!!

கீழே இருக்கும் வலைதளத்திற்கு சென்று டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். recuva download

கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படங்களைப் பார்த்த நால்வர் யாழில் கைது...

Sunday, July 22, 2012

சூரிய ஒளியின் மூலமாக இயங்கும் பேருந்து சேவை:சீனா சாதனை-



குழந்தையைப் பெற்று குழி தோண்டிப் புதைத்த தாய்...யாழ் சுன்னாகத்தில் சம்பவம் !

Saturday, July 21, 2012

நகங்கள் அழகாக,நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் ...



முகத்திற்கு ஏற்ப நகங்களை வளர்க்க பெரும்பாலான பெண்கள் ஆசைப்படுவார்கள்.ஆனால் முகத்திற்கு தரும் பராமரிப்பை நகங்களுக்கு தருவதில்லை.நகங்கள் அழகாக,நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் 
தரமான நெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகியுங்கள்.அப்போது தான் நகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.நெயில் பாலீஷ் வாங்கும் போது உங்கள் நிறத்திற்கு ஏற்ற கலராக பார்த்து தேர்ந்தெடுங்கள்.சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால்,நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும்.அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால்,நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால் எளிதாக வெட்ட முடியும். அதே போல்,தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.



சில பெண்கள் ஆசை ஆசையாக வளர்க்கும் நகங்கள் உடைந்து விடுகின்றது.நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள்,சிறிதளவு பேபி ஓயிலில்(Baby Oil) நகங்களை மூழ்கும் படி வைத்தால்,நகங்கள் உறுதியாகும்.நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும்.ஆகவே,அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.

தண்ணீரை மிதமாக சூடாக்கி,சிறிது உப்பு கலந்து,அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால்,விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
தினமும் நெயில் பாலீஷ் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்படும்.எனவே வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நெயில் பாலீஷ் உபயோகிக்காமல் இருப்பது நல்லது.

ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால்,நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது.எனவே,நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் நகங்கள் பளபளப்பாக இருக்கும்.அதேபோல்,பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும்.மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.


மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால் நகங்களில் காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.
நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம்.எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.
நெயில் பாலீஷ் போடும் போது,பிரஷ்ஷினால் நகத்தின் அடிப்பகுதியில் நுனி வரை ஒரே தடவையாக போட வேண்டும்.அப்போது தான் அவை பளபளப்பாக எவ்வித திட்டுக்களும் இன்றி அழகாக காட்சியளிக்கும்.

குழந்தைகளுக்கான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்(Desktop Computer) அறிமுகம்!

சிறிய குழந்தைகள் முதல் படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்(Desktop Computer) அறிமுகமாகி உள்ளது. முற்றிலும் வண்ணமயமாக்கப்பட்ட குழந்தைகள் விளையாடும் பிளே ஸ்டேசன்(Play Station) போல் இது அமைந்துள்ளது. இந்த டெஸ்க்டாப் கம்யூட்டருக்கு பிரிமியர் கிட்ஸ் சைபர்நெட் ஸ்டேசன் என்று பெயர் வைத்துள்ளனர். தண்ணீர் கீபோர்டில் பட்டால் கூட எந்த பழுதும் ஏற்படாது என்பதில் இருந்து மொனிடரை தொட்டு இன்புட் கொடுக்கலாம் என்பதுவரை அனைத்தும் கொஞ்சம் வித்தியாசமாகத் தான் உள்ளது.

இண்டெர்நெட்டில் ஆபாச இணையதளங்களை தடுக்கும் மென்பொருளும் எந்த வைரஸும் கம்யூட்டரை தாக்காத வண்ணம் உள்ள மென்பொருள்களையும் வடிவமைத்துள்ளனர். இதனுடன் குழந்தைகள் அறிவை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான பேக்கேஸும் சேர்த்தே கொடுக்கின்றனர்.



இதில் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்த டொட்லர் என்று முதல் பேக்கேஸ். 


இரண்டாவது 5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்த கைண்டர்கெர்டன் என்ற பேக்கேஸ். 


மூன்றாவதாக 11 முதல் 15 வயது வரை உள்ள தொடக்க மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கான பேக்கேஸும் உள்ளது. 
இத்தனை வசதிகளும் உள்ள இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் விலை கொஞ்சம் அதிகம் தான் இதன் விலை 1999 அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கறுப்பா இருக்கீங்களா? கவலைபடாதீங்க…

இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகஅழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கறுப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே. இவ்வாறு கறுப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது  றுப்பாக  இருக்கும். சிலர் திடீரென்று  றுப்பாக  மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும். அதுமட்டுமல்லாமல் இத்தகைய செல்களின் சுரப்புத்தன்மையை குறைவு படுத்த பல கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள் இருந்தாலும், வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து செய்தால், சருமமானது அழகோடு இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


1. வெண்ணெய் பழத்தில் இருக்கும் ஃபேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின் ஈ, நிறமி செல்லான மெலனின் அளவை கட்டுப்படுத்தும்.அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்பழ (Avocado) பேஸ்ட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பாலை ஊற்றி நன்கு கலந்து, முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் முகத்தில் அளவுக்கதிகமாக  இருக்கும் மெலனின் அளவு குறையும். முகமும் அழகாக, பொலிவோடு இருக்கும்.


2. பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அதனை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பானது மறையும். 


3. பால் 2-3 டேபிள் ஸ்பூன்  மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தில் குளிர்ந்த நீரில் அலசி வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும். இது மிகவும் சிறந்த இயற்கையான வழியும் கூட...


4. சந்தன பவுடர் நல்லதொரு சரும பராமரிப்பிற்கு ஏற்ற சிறந்த  பொருள். அதனை தண்ணீரில் குழைத்து, கருமை அதிகமாக இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள், அத்துடன் பால் மற்றும் சிறிதளவு தேனை கலந்து தடவி, 10-15 நிமிடம் ஊறச் செய்யுங்கள். அதனை நாள்தோறும் செய்து வந்தால், நாளடைவில் நிறமி செல்களான மெலனின் அளவு குறைந்துவிடும்.


5. கோக்கோ வெண்ணெய் ஒரு நல்ல மாஸ்சுரைசர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருள். அது விரைவில் மெலனின் அளவை சரிசெய்யும். மேலும் எந்த இடம் அதிகமான அளவு கறுப்பாக உள்ளதோ, அந்த இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன் இரத்த ஓட்டத்தின் அளவும்  அதிகரிக்கும். மேலும் இது செல்கள் பாதிப்படையாமல் காத்துக் கொள்ளும். இந்த முறை உடலுக்கு விரைவில் நல்ல நிறத்தைக் கொடுக்கும். மேற்கூறியவாறெல்லாம் செய்தால் உடலில் அதிகமாக இருக்கும் மெலனின் அளவு குறைவதோடு, முகமும் அழகாக புதுப்பொலிவோடு காணப்படும்.

மூன்று மார்புகளுடன் கலக்கும் காத்லீன் லீப்! (படங்கள் இணைப்பு )




ஹாலிவுட்டில் ஒரு படத்திற்காக ஒரு நடிகை மூன்று மார்புகளுடன் காட்சி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த நடிகையின் பெயர் காத்லீன் லீப்.
சாண்டியாகோவில் நடந்த காமிகான் நிகழ்ச்சியின்போது மூன்று மார்புகள் தெரிய அவர் வந்தபோது அனைவரும் வியந்து போய் அங்கேயே பார்த்தனர்.
லென் வைஸ்மேனின் டோட்டல் ரீகால் படத்தின் ரீமேக்கில்தான் இப்படி மூன்று மார்புகளுடன் தோன்றுகிறார் காத்லீன்.
மூன்று மார்புகளும் வெளியில் தெரியும்படியாக அவர் கவர்ச்சிகரமான உடையுடன் வந்தபோது நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அத்தனை பேரின் பார்வையும் மூன்று மார்புகள் மீதுதான் விழுந்தது.
இந்த மார்பு நிஜமான மார்பு அல்ல, மாறாக செயற்கையாக உருவாக்கப்பட் மார்பு, டோட்டல் ரீகால் படத்தில் இப்படி மூன்று மார்புகளுடன் அவர் தோன்றுகிறார். பட புரமோஷனுக்காக செயற்கை மார்பகத்தைப் பொருத்தியபடி அவர் வந்திரு்நதார்.
நிஜமான மார்பு போலவே காத்லீனின் மூன்றாவது மார்பும் கம்பீரமாக காட்சி அளித்ததைப் பார்த்து பலரும் வியந்தனர்.
காத்லீன் டோட்டல் ரீகால் படத்தில் மூன்று மார்புகளுடன் நடிப்பது ஏற்கனவே ரசிகர்களிடையே கிளுகிளுப்பை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் நிஜமாகவே அதே கெட்டப்பில் அவரை நேரில் பார்த்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகி விட்டது.
தன்னையே உற்றுப் பார்த்தவர்களைப் பார்த்து சிரித்தபடி காத்லீன் இப்படிச் சொன்னார்…உங்களுக்கு மூன்று கைகள் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் இல்லையா….!





பழைய புடவைகளை புதிதாக மாற்றி பயன்படுத்த ஐடியா!!!

அழகான பழைய துப்பட்டாக்களில் மூன்று இருந்தால், அழகான புடவை ஒன்றை புதிதாக உருவாக்கிவிடலாம். மூன்று தாவணிகள் இருந்தாலும் அதை புதிய புடவையாக டிசைன் செய்துவிடலாம். பழைய ஒன்றிரண்டு புடவைகளின் அழகான டிசைன்களை இணைத்துகூட, புதிய டிசைன் புடவை உருவாக்கலாம். அதனால் பணச்செலவு மிச்சமாகும்.
புதிய டிசைன் புடவைகளும் கிடைக்கும். இரண்டு `ஸ்டைல்’களை கலந்தும் புதிய ஸ்டைல் உருவாக்கலாம். அப்படி உருவானது `காக்ரா சாரி`. இதன் முன்பகுதி காக்ரா மாதிரி இருக்கும். பின் பகுதி புடவைபோல் தோன்றும். `தாவணி ஸ்டைல்’ புடவையில் ஒரு புடவை இரு கலராகத் தெரியும். தூரத்தில் இருந்து பார்த்தால் பாவாடை- தாவணி அணிந்திருப்பதுபோல் தோன்றும்.
பெரும்பாலும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்), கிளாமரஸ் பிரிவு (பளிச்சென்ற ஜிகினா ஸ்டைல் உடைகளில் ஆர்வம் கொள்பவர்களுக்கான வகை), டிரமாட்டிக் ஸ்டைல் (இந்த வகை உடைகளில் ஒரு நாடகம் அரங்கேறியதுபோல் காட்சிகள் இருக்கும். இந்த வகை உடைகள் எல்லோரது பார்வையையும் சுண்டி இழுக்கும்), கிரியேட்டிவ் ஸ்டைல் (இவர்கள் தங்கள் கற்பனைக்கு தக்கபடி புதிதாக ஆடைகளை வடிவமைத்து கேட்பவர்கள்).
ஒரு பெண் இந்த 6 வகை உடைகளில் எதில் கவனம் செலுத்துகிறாரோ அதை வைத்து அவர் டேஸ்ட், குணங்களை கணித்துவிடலாம். தமிழ் நாட்டில் கிளாசிக்கல் அண்ட் டிரடீஷனல் உடைகளை தேர்ந்தெடுப்பவர்களே அதிகம். அடுத்த இடத்தில் எலிகண்ட் ஸ்டைல் இருக்கிறது என்று வகை வகையாய் உடைகளை வைத்தே பெண்களின் குணங்களை கணித்து சொல்கிறார்கள்..

தென் ஆப்ரிக்காவுக்கெதிரான டெஸ்ட்டில் சதம் கடந்தார் அலியஸ்டர் குக்...




தென் ஆப்ரிக்காவுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரு ஸ்ட்ராஸ் ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அலியஸ்டர் குக் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 115 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய ஜொனதன் ட்ராட் 71 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய கெவின் பீட்டர்சன் 42 ஓட்டங்களும், இயன் பெல் 13 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்பு களமிறங்கிய பிரெஸ்னன் 8 ஓட்டங்களும், ஸ்டுவர்ட் பிராட் 16 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணி இரண்டாம் நாளான இன்று 8 விக்கெட் இழப்பிற்கு 377 ஓட்டங்கள் எடுத்து துடுப்பெடுத்தாடி வருகிறது. மேட் பிரியர் 58 ஓட்டங்களும், கிரேம் ஸ்வான் 11 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்.








கேரள அரசு விருது: சிறந்த நடிகர் திலீப், சிறந்த நடிகை ஸ்வேதாமேனன்




கேரள அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.இந்த வகையில், 2011ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்களை தெரிவு செய்வதற்காக விருது கமிட்டி தலைவராக பாக்யராஜ் நியமிக்கப்பட்டார்.
விருது பெறும் கலைஞர்களின் விவரங்களை கேரள மந்திரி கணேஷ்குமார் திருவனந்தபுரத்தில் நேற்று அறிவித்தார். சிறந்த நடிகராக வெள்ளரிப்பிரா வின்டே சங்காதி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் திலீப் தெரிவு செய்யப்பட்டார்.
சால்ட் அன்ட் பெப்பர் படத்தில் நடித்த ஸ்வேதாமேனன் சிறந்த நடிகையாக தெரிவு செய்யப்பட்டார். சிறந்த படமாக இந்தியன் ருப்பி தெரிவு செய்யப்பட்டது.
சிறந்த இயக்குனருக்கான விருதை பிளஸ்சியும் (பிரணயம்), சிறந்த இசையமைப்பாளராக சரத் (இவன் மேகரூபன்), பாடகராக சுதீப்குமார் (ரதி நிர்வேதம்), பாடகியாக ஸ்ரேயா கோஸல், பாடல் ஆசிரியராக ஸ்ரீகுமாரன்தம்பி, நகைச்சுவை நடிகராக ஜெகதி ஸ்ரீகுமார், புதுமுக இயக்குனராக ஷெர்ரி (ஆதிமத்யாந்தம்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான விருது அடுத்த மாதம் திருவனந்தபுரத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்படுகிறது.

அன்னாசியின் மருத்துவ குணங்கள்!

இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங்களில் ஒன்று அன்னாச்சி பழம்.அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன. சமீபத்திய ஆய்வுகளில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.அன்னாசி பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம் என்கின்றனர் டாக்டர்கள்.அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும்.நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர ஆண்களின் முக அழகு பொலிவு பெருகும்.ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் சாப்பிட்டால் போதும். பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம், கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

வாய் துர் நாற்றத்தை சரிசெய்வது எவ்வாறு ?

வாய் துர் நாற்றம் , வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது. சாதாரணமாக வாயிலுள்ள நுண்கிருமிகளால் வெளியேறும் கழிவுகளில் ஆவியாகக் கூடிய கந்தக (Sulfur) கூட்டுப் பொருட்கள் உள்ளன. அழுகிய முட்டையிலிருந்து வெளியேறும் Hydrogen sulfide, குப்பைக் கிடன்கிலிருந்து வரும் Methyl mercaptan, கடல் புறங்களிலிருந்து வெளியாகும் Dimethyl sulfide ஆகிய கழிவுகள் வாயிலுள்ள நுண் கிருமிகளிலிருந்து வெளியேறுகின்றன. இவைகள் Volatile Sulfur Compound (VSC) என்றழைக்கபடுகின்றன.

வாயிலிருக்கும் நுண்கிருமிகளால் வெளியேறும் இன்னும் வேறு பல கழிவுகளும் துர் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

Cadaverine – இறந்த உடலிலிருந்து வெளியேறும் நாற்றம்,
Putrescine – அழுகும் இறைச்சியிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Skatole – மனிதக் கழிவிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Isovaleric acid – வியர்க்கும் பாதத்திலிருந்து ஏற்படும் நாற்றம்.


கிருமிகள் பெருகுவதற்கு தேவையான உணவு நாம் உண்ணும் மீன், இறைச்சி, முட்டை, பால் போன்ற புரத உணவிலிருந்தும், உமிழ் நீர், வாயின் உட்புறத்தில் கழியும் திசுக்களிலிருந்தும் கிடைக்கிறது. வாயை, சாப்பிட்ட ஒவ்வொரு முறையும் நன்றாக கொப்பளிக்காததால் உணவுப் பொருட்கள் வெண்மையான காரையாக பற்களின் இடுக்குகளில், பற்களின் மேல், ஈறுகளுக்கு உட்புறம் மற்றும் நாக்கின் பிற்பகுதியில் மாவு போன்ற வெண் படலமாக படிந்து விடுகிறது. வெண்படிமம் 0.1 – 0.2 மி.மீ அளவில் இருந்தாலும் கிருமிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் பெருகி கழிவுகளை வெளியேற்றுகின்றன.
பற்கள் கட்டியிருந்தால், அதற்கும், வாய்க்கு இடையிலும் உணவுப் பொருட்கள் தங்கி கிருமிகள் வளர ஏதுவாகிறது. வாயிலும், நாக்கிலும், பற்களின் இடுக்குகளிலும் உள்ள இடத்தில் குடியேறி கழிவுகளை வெளியேற்றும் கிருமிகளுக்கும், பிற கிருமிகளுக்கும் நிரந்தர போட்டி நடந்து கொண்டேயிருக்கிறது. இக்கிருமிகளும், அதன் கழிவுகளும் எல்லோரின் வாயிலும் இருக்கின்றன. வாயையும், பற்களையும் சுத்தமாக வைத்திருப்பவர்கள் பலருக்கு நாற்றம் இல்லாமல் இருக்கிறது. வாயையும், பற்களையும் சரியாக பராமரிக்காதவர்களுக்கு நாற்றம் மிகுந்து இருக்கிறது.

அடுத்து,  வாயின் உட்பகுதியில் ஈறு நோய் (Gum disease – Chronic Periodontitis) பாதிப்புள்ளவர்களுக்கும் வாயில் துர் நாற்றம் ஏற்படலாம். குறிப்பாக நாக்கின் பின் புறத்திற்கு அருகிலுள்ள பற்கள் மற்றும் ஈற்றின் இடைவெளிகளில் உணவுப் பொருட்களின் படிமம் தேங்குகிறது. இந்த இடங்களிலும் நுண் கிருமிகள் தங்கி பற்களைச் சுற்றியுள்ள எலும்புப் பகுதியை அரித்து, பற்களில் குழியை (Periodontal pockets) ஏற்படுத்துகிறது. இந்த குழிகளிலும் மேலும் உணவுப் பொருட்களும், கிருமிகளும் தங்கி, கழிவுப் பொருட்களை உற்பத்தி செய்து வாய் துர் நாற்றத்தை அதிகரிக்கிறது.

வாய் துர் நாற்றத்திற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது?

1. நாக்கை சுத்தம் செய்வது மிகவும் முதன்மையானதும் அவசியமானதுமாகும். நாக்கின் முன் பாதி சாப்பிடும் போதும், பேசும் போதும் அடிக்கடி வாயின் மேல்புறத்தில் (Hard palate) உராய்வதால் இயற்கையாகவே சுத்தமாகிறது. ஆனால் நாக்கின் பின் பகுதி மிருதுவான Soft palate ல் உராய்வதால் போதுமான அளவில் சுத்தமாவதில்லை.  வாயில் உற்பத்தியாகும் கிருமிகளையும், கந்தக காம்பௌன்ட் கழிவுகளையும் நீக்கக் கூடிய குளோரின் டை ஆக்ஸைடு அல்லது Cetylpyridinium குளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். Tooth brush மற்றும் பிளாஸ்டிக் ஸ்பூன் அல்லது Tooth scaraper உபயோகித்து நாக்கின் பின்பகுதியையும், பற்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

2. முறையான இடைவெளியில் பல் மருத்துவரிடம் ஈறு பரிசோதனையும், பற்களை சுத்தம் செய்வதும் மிக அவசியம். பற்களின் நிலைமையும், ஈறு நன்றாக வீக்கமின்றி இருக்கிறதா என்பதையும் பல் மருத்துவரிடம் முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பற்களில் காரை படிந்தும், எலும்பு தேய்ந்து பற்குழிகள் ஏற்பட்டிருந்தாலும் தகுந்த சிகிட்சை அளித்து பற்களைக் காப்பாற்றி, துர் நாற்றத்தையும் தவிர்க்க உதவுவார்.

3. புரதச்சத்துள்ள ஆகாரத்தை குறைத்தும், அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துள்ள உணவைச் சாப்பிட்டு வந்தால், வாயில் நுண் கிருமிகள் வளர வாய்ப்பிருக்காது. இத்துடன் புரதச் சத்துள்ள உணவைச் சாப்பிட்ட போது முறையாக நாக்கின் பின் பகுதியை சுரண்டி வழித்தும், பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள புரத உணவுத் துகள்களை Floss உபயோகித்து நீக்கியும், வாய் கொப்பளிக்கும் கிருமி நாசினி மருந்து (Chlorhexidine, Povidone 2% Gargle) திரவத்தால் வாய் கொப்பளித்தும் வாய் துர் நாற்றத்தைப் போக்கலாம்

4. வாயில் எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரவில் தூங்கும் போது உமிழ் நீர் சுரப்பது குறைந்து, தூங்கி எழும் போது காலையிலும், நீண்ட நேரம் பேசினாலும், பேசிய பின்னும் ஈரப்பதமின்றி வாய் உலர்ந்து விடும். வாயில் ஈரப்பதம் இல்லையென்றால் துர் நாற்றம் வீசும். இதை தவிர்க்க தினமும் நிறைய நீர் குடிக்க வேண்டும். இது உமிழ் நீர் சுரக்க உதவி, வாய் ஈரப்பதத்துடன் இருக்கும். அடிக்கடி நல்ல நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் ஈரப்பதத்துடன், வாயிலுள்ள கிருமிகளையும் அதன் கழிவுகளையும் அகற்றலாம். சர்க்கரையில்லாத மிட்டாய்கள் சுவைப்பதாலும் வாயிலுள்ள ஈரப்பதத்தை அதிகமாக்கி துர் நாற்றத்தை போக்கலாம்.

5. கிருமி நாசினியாக வாய் கொப்பளிக்கும் மருந்தையும் (Mouth wash) பயன்படுத்த வேண்டும். வாய் கொப்பளிக்கும் மருந்து 1. நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையது, 2. வாய் நாற்றம் தரும் கந்தக கூட்டுப் பொருட்களை சமன் செய்வது என இரண்டு வகைப்படும்.  Listerine, Cetylpyridinium Chloride mouth wash ஆகிய இரண்டும் நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. Zinc ions உள்ள Mouth wash வாயில் நுண் கிருமிகளால் உற்பத்தியாகும் கந்தகம் கலந்த கழிவுப் பொருட்களை சமன் படுத்தும் தன்மையுடையது. இரண்டு தன்மையும் உடைய Chlorine dioxide அல்லது Sodium chlorite கலந்த Mouth wash ம் உபயோகிக்கலாம்.

சில பற்கள் அல்லது முழுவதும் (Full denture) பல் கட்டியிருந்தால், சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் அவைகளையும் கழற்றி நன்றாக கழுவிய பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இரவில் தூங்கும் போது பல் செட்டை கழற்றி, பற்பசை கொண்டு பிரஷ்சால் செட்டின் உட்புறமும் வெளியிலும் தேய்த்து தனியாக ஒரு கப்பில் வைத்து விட வேண்டும். பல் செட்டில் இயற்கையாகவே நுண் துளைகள் இருக்கும். எனவே துளைகளுக்குள் சென்று சுத்தம் செய்யக் கூடிய கிருமி நாசினி யை உபயோகித்து இரண்டு வேளையும் பல் செட்டை சுத்தம் செய்ய வேண்டும்.

மேற் கூறிய எல்லா முறைகளையும் பின் பற்றினால்தான் வாய் துர் நாற்றத்தை முழுமையாக நீக்கலாம்.




Friday, July 20, 2012

யாழ்ப்பாணம் பழைய பூங்கா(OLD PARK) இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைப்பு .



யாழ்ப்பாணம் பழைய பூங்கா(OLD PARK) இன்று வெள்ளிக்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவினால் திறந்து வைக்கப்பட்து. 
தமிழரின் வரலாற்றுப் பொக்கிஷமான இந்த பூங்கா 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கடந்த யுத்த நடவடிக்கையின் போது முற்றாக சிதைவடைந்துள்ள இந்தப் பூங்கா இன்றைய தினம் புதிப் பொலிவுடன் காணப்படுகின்றது.
யாழ் மாவட்ட செலயத்திற்கு முன்னால் உள்ள பழைய பூங்காவின் கேணியுடன் அண்டிய முன்பகுதி வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறியினால் பொழுதுபோக்கு மையமாக மாற்றப்பட்டு இன்று திறந்து வைக்கப்படுகின்றது.
18மில்லியன் ரூபா செலவில் இப்பூங்கா புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பழைய பூங்கா திறப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி மகிந்த கத்துரு சிங்க, யாழ்.நாடாளுமன்ற உறுப்பினர் சிற்வேஸ்திரி அலன்ரின் மற்றும் யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.









Thursday, July 19, 2012

MP3 Quality Modifier: MP3 கோப்பின் தரத்தை அதிகரிக்கும் மென்பொருள்



தரம் குறைந்து காணப்படும் MP3 கோப்புகளை இயக்கும் போது சத்தம் குறைவாக இருப்பதுடன், கேட்பதற்கு ஸ்டீரியோ வசதி இன்றி இருக்கும்.

மிக எளிதாக MP3 கோப்பின் தரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

இதற்கு முதலில் MP3 Quality Modifier என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.

அதன் பின் இந்த மென்பொருளை ஓபன் செய்ததும்,  தோன்றும் விண்டோவில் மாற்றம் செய்ய வேண்டிய கோப்பை தெரிவு செய்து கொள்ளவும்.

தெரிவு செய்தவுடன், உங்களுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்து, Process என்ற பட்டனை அழுத்தினால் போதும். 

உங்களுடைய MP3 பைல் புதிய தரத்துடன் உருவாகும்.அடுத்து வரும் விண்டோவில் உங்களின் பழைய கோப்பின் அளவும், மாற்றம் செய்த கோப்பின் அளவும் மற்றும் எதனை சதவீதம் மாற்றம் செய்துள்ளது என்ற தகவல்களும் வரும்.


போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை சேதப்படுத்திய அறுவர் கைது!




இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் ஆறு பேரும் மது போதையில் இருந்த வேளை பஸ்வண்டி மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அவிசாவளை - கொழும்பு பழைய வீதிப் பகுதியிலுள்ள ஹங்வெல்ல பிரதேசத்தில் வைத்து பஸ்வண்டியை சேதப்படுத்தியுள்ளனர்.தாக்குதலுக்கு இலக்கான பஸ்வண்டி மட்டக்குளி டிப்போவிற்கு சொந்தமானது என பொலிஸார் தெரிவித்தனர்.இவர்கள் ஆறு பேரும் ஹங்வெல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் இன்று அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


யாழில் 85731 சதுரமீற்றர் பரப்பளவில் மிதிவெடி அகற்றப்பட்டுள்ளது!


  யாழ். குடநாட்டில் 85 ஆயிரத்து 731 சதுரமீற்றர் பரப்பளவிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 840 சதுரமீற்றர் பரப்பளவிலும் மிதிவெடி அகற்றி முடிக்கப்பட்டு அவை கையளிக்கப்படுவதற்குத் தயார் நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட மிதிவெடி செயற்பாட்டு அலுவலர் வ.முருகதாஸ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழைப் பிரதேச செயலர் பிரிவின் ஜே/228 கிராம சேவகர் பிரிவில் புற்றுநோய் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள காணியில் 22 ஆயிரத்து 559 சதுரமீற்றர் பரப்பளவு துப்புரவு செய்யப்பட்டுக் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 18 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் ஒட்டுப்பேலி (ஜே/330) கிராம அலுவலர் பிரிவில் 54 ஆயிரத்து 411 சதுரமீற்றர் பரப்பளவில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் 2 ஆயிரத்து 417 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.இதேபோன்று எழுதுமட்டுவாழ் பகுதியில் 31 ஆயிரத்து 320 சதுரமீற்றர் பரப்பளவில் மிதிவெடி அகற்றல் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளன. இந்தப் பகுதியில் 16 வெடிக்காத வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 6 பிரதேசங்களில் மிதிவெடி அகற்றல் நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளன. பொன்நகர், ஸ்கந்தபுரம், மலையாளபுரம், உருத்திரபுரம், செல்வாநகர் ஆகிய பகுதிகளில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 388 சதுரமீற்றர் பரப்பளவில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.இந்தப் பகுதிகளில் 462 ஆயிரம் மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. இதனைவிடக் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் கோரக்கன் கட்டுப் பகுதியில் 84 ஆயிரத்து 176 சதுரமீற்றர் பரப்பில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் 101 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. பரந்தன் சந்திக்கு அண்மையில் வைத்திலிங்கம் கமம் பகுதியில் 5 ஆயிரத்து 976 சதுரமீற்றர் பரப்பில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன் 15 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசங்கள் விரைவில் கையளிக்கப்படவுள்ளதாகத் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை பார்க்காத நித்தியானந்தா ரஞ்சிதா காமலீலைகள்.! (முழு வீடியோ)




சன் தொலைக்காட்சி மற்றும் நக்கீரன் பத்திரிகைக்கு கிடைத்து நித்தியாநந்தா ரஞ்சிதா காம லீலைகள் ஏனைய ஊடகங்களில் வெறும் 5 நிமிடங்களே வெளியிடப்பட்டது. இருப்பினும் அதன் முழுமையான காட்சிகளை பலர் பார்த்திருக்க மாட்டீர்கள்.
தற்போது நித்தி ரஞ்சி நடத்திய காம நாடகம் அமெரிக்க தடயவியல் மையத்தினால் உண்மையானதுதான் என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நீங்கள் இதுவரை பார்த்திராத நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதாவில் காம லீலைகளை இந்த வீடியோவில் காணலாம்...
இது போலிச்சாமியார்களை நம்பி ஏமாறும் மடச்சாம்பிராணிகளுக்காவே தவிர வேறு எந்த நோக்கங்களுக்காகவும் அல்ல....


நெல்லியடி ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற புலிக்கொடி விவகாரம்...விசாரணை நடத்தப்படும் என்கிறார் அமைச்சர் கெஹலிய!





தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று நெல்லியடியில் நடைபெற்ற அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தின் போது புலிக்கொடி ஏந்தியவாறு மோட்டார் சைக்கிள்களில் வலம்வந்த மர்ம நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது,
நேற்றைய நெல்லியடி ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற புலிக்கொடி விவகாரம் தொடர்பில் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அத்துடன் அந்த செய்தியாளர், ஐக்கிய தேசிய கட்சியினரால் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போதும் புலிக்கொடி ஏந்தியவாறு மர்ம நபர்கள் நடமாடியதை ஞாபகப்படுத்தினார்.
அந்த சம்பவத்தை அடுத்து விசாரணை நடத்தப்படும் என்று அரசாங்கம் அப்போது அறிவித்திருந்த போதிலும், இதுவரையில் சந்தேகநபர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
 அதேபோன்று, நேற்று நடைபெற்ற புலிக்கொடி ஏந்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளிலும் அரசாங்கம் பாராமுகம் காண்பிக்குமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சற்றும் தாமதிக்காத அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 'விசாரணை நடத்தப்படும் என்று ஒரே வார்த்தையில் பதிலளித்துவிட்டு வேறு விடயம் தொடர்பில் கலந்துரையாட ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.