Sunday, July 15, 2012

லொறி கவிழ்ந்து வீட்டின் மீது விழுந்தது. சாரதி பலி, இருவர் படுகாயம்.



கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் தங்காலை - மஹவெல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறியொன்று இன்று (15) அதிகாலை வீதியை விட்டு விலகி வீடொன்றின் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் லொறியில் பயணித்த சாரதி உள்ளிட்ட இருவரும் வீட்டில் இருந்த பெண்ணும் படுகாயமடைந்து தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment