Sunday, May 27, 2012

தமிழரசுக்கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்...


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும், அவசரகால சட்டத்தின் கீழும் தடுப்புக் காவலில் அல்லல் உறும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் 1970ஆம், 1980ஆம் ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட முன்மாதிரிகளைப் பின்பற்றி பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். வாழ்க்கை செலவு சுமையிலிருந்து மக்களை விடுவித்து இயல்பு வாழ்வை ஏற்படுத்துதல்.
7. இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மனித உரிமை பாதுகாப்பு சம்மந்தமாக சர்வதேச சமூகம் இதுவரை ஆற்றியிருக்கும் பங்களிப்புக்காக அவர்களுக்கு நன்றி சொல்லும் அதே வேளையில், தொடர்ந்து தமிழ் மக்களை வன்முறையிலிருந்து பாதுகாப்பதற்கும் தமிழ் மக்களின் மனித உரிமைகள், அரசியல் உரிமைகள் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் சர்வதேச சமூகம் தேவையான உதவிகளையாற்றி அதன் மூலமாக நாட்டில் நீதி, நேர்மை, கௌரவம், சமத்துவம் என்ற அடிப்படையில் விசுவாசமான புரிந்துணர்வும் சமத்துவமும் நல்லுணர்வும் ஏற்படுத்த வழி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
8. எம்மால் நியாயமான முறையின் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு எமது மக்கள் பரிபூரணமான ஆதரவை நல்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளும் அதே வேளையில் இவற்றை அடைவதற்கு இந் நாட்டின் சிங்கள, முஸ்லிம் சகோதரர்களும் ஏனைய முற்போக்கு சக்திகளும் தமது ஒத்துழைப்பை நல்க வேண்டுமென வினயமாக வேண்டுகிறோம்.
சர்வதேச விசாரணை
இந்த மாநாட்டில் இலங்கை அரசாங்கத்திடம் மிகவும் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறோம். இவற்றை அரசாங்கம் மறுதலிக்குமாக இருந்தால் இந்த நியாயமான இலக்குகளை அடைவதற்காக நாம் காந்தீய வழியில் வன்முறையற்ற சாத்வீக போராட்டம் ஒன்றை உரிய நேரத்தில் உரிய முறையில் ஆரம்பித்து அவற்றை அடையும் வரை போராடுவோம் என்று தெளிவாகவும் வெளிப்படையாகவும் தமிழ் அரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு உறுதியுடன் இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment