
இந்நிலையில் 9 வயது மகளை ஓநாய்களுடன் கூண்டில் அடைத்து பயிற்சி அளித்த தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ளது ரும்கி. இந்நகரில் செல்ல பிராணிகள் கண்காட்சி நடந்தது. இங்கு 2 ஓநாய்கள் அடைக்கப்பட்ட கூண்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த கூண்டில் 9 வயது சிறுமி ஸு லின் என்ற சிறுமியும் அடைக்கப்பட்டிருந்தாள். இதுகுறித்து அவளது தந்தை ஸு யாங்ஷெங் கூறுகையில், என் மகள் துணிச்சலுடன் வளர வேண்டும். அதற்காகதான் இந்த பயிற்சி. ஆனால் நான் கொடூரமானவன் என்று சிலர் கூறுகின்றனர் என்று சாதாரணமாக கூறினார்.
ஓநாய்களுடன் கூண்டில் சிறுமி இருக்கும் படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனையடுத்து சிறுமியின் தந்தைக்கு பல தரப்பில் இருந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நாய் மற்றும் ஓநாய்களுக்கு பயிற்சி அளிக்கும் தொழில் செய்து வருகிறார் ஸுயாங் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment