Tuesday, April 10, 2012

டைட்டானிக் நினைவு தினத்தை அனுசரிக்க விபத்து நடந்த இடத்தை நோக்கி பயணம்


உலகை கண்கலங்கச்செய்த வரலாற்றுச் சம்பவங்களில் ஒன்றாக டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கியதும் கருதப்படுகிறது.

டைட்டானிக்: கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 10ம் திகதி, தனது ஆரம்பமும் இறுதியுமான பயணத்தை தொடங்கிய டைட்டானிக் கப்பலை நினைவு கூறும் விதமாக, உலகம் முழுவதும் நூறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
டைட்டானிக் கப்பல், வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள ஹார்லாண்ட் மற்றும் ஊல்ப் நிறுவனத்தால் கட்டப்பட்டது.
உலகின் மிகப்பெரிய முதல் நீராவி ஆடம்பர கப்பலான இதன் கட்டுமானப்பணிகள், 1909 முதல் மூன்று ஆண்டுகள் நடைபெற்றது. 882 அடி (269 மீ) நீளம், 175 அடி (53.3மீ) உயரம் 46328 டன் எடை, 9 தளங்களையும் கொண்டது. 2,435 பயணிகள், 892 பணியாட்கள் தங்கலாம். ஆபத்து காலத்தில் உதவும் வகையில், 20 லைப் படகுகள் இருந்தன. இவற்றின் உதவியுடன் 1,178 பேர் உயிர் பிழைக்கலாம் என்ற வகையில் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து 1912, ஏப்ரல் 12ல் பிரிட்டனில் உள்ள சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து, நியூயோர்க்கை நோக்கி, கப்டன் எட்வர்டு ஸ்மித் தலைமையில், 2,224 பயணிகளுடன் தன் பயணத்தை தொடங்கிய டைட்டானிக், ஏப்ரல் 14ம் திகதி நள்ளிரவு 11.40 மணிக்கு, அட்லாண்டிக் கடல் பனிப்பாறையின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
மீட்புப் படையினர் வருவதற்குள் 2 மணி 40 நிமிடங்களில் முற்றிலுமாக டைட்டானிக் கடலில் மூழ்கியது. கடலில் இருந்த திசை காட்டும் கருவி சரியாக செயற்படாததே விபத்திற்கு காரணம் என்று கப்பலில் பயணம் செய்த கப்டனின் பேத்தி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதில் பயணம் செய்த 1,514 பேர் இறந்தனர். மற்றவர்கள் லைப் படகுகள் உதவியுடன் தப்பித்தனர். கடலில் விழுந்தவர்கள் கடும் குளிர் (-2 டிகிரி செல்சியஸ்) காரணமாக உறைந்து இறந்தனர்.

0 comments:

Post a Comment