Saturday, April 28, 2012

தமிழீழம் பற்றி கருணாநிதி திடீரெனத் தொடர்ந்து பேச ஆரம்​பித்து உள்ளாரே... என்ன மேட்டர்????


சீஸன் முடிந்ததும் அவரும் மறந்து விடுவார். மற்றவர்களும் அவரிடம் அதுபற்றிக் கேட்க மாட்டார்கள். ஆனால், கடந்த ஒரு வாரமாக தினமும் தமிழ் ஈழ முழக்கம்தான். ஒரு காலத்தில் அவர் நடத்தி வந்த தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு என்று சொல்லப்படும் டெசோ அமைப்பை மறுபடியும் புதுப்பிக்கும் அளவுக்கு கருணாநிதி மும்​முரமாக இருப்பதுதான் புதிர்!

''இந்தப் புதுப்பிக்கும் வேலைக்குப் பின்னணியாக இருப்பது கருணாநிதியின் புதுக் கூட்டணிக் கனவு என்கிறார்கள் அரசியலை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள். காங்கிரஸ் கட்சியை எப்படியாவது கழற்றிவிடும் மன​நிலைக்கு கருணாநிதி வந்து விட்டாராம்.

இலங்கைப் பிரச்னை​யை அதிகமாகக் கையில் எடுத்தால்தான், டெல்லி மேலிடம் கோபிக்கும். அதன் பிறகு கழன்றுகொள்ளலாம் என்பது திட்டமாம். 'அடுத்து வரப்​போகும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவு எப்படிப் பார்த்தாலும், காங்கிரஸுக்குச் சாதகமாக அமையாது. அப்படி இருக்க, அவர்களுடன் நாம் ஏன் இருக்க வேண்டும். நைஸாக நடுவிலேயே வெட்டிக்கொள்வது நல்லது என்று கருணாநிதி நினைக்கிறார்.



0 comments:

Post a Comment