Saturday, May 12, 2012

குழந்தை, மனைவிகளை கொன்று விட்டு கணவன் தற்கொலை...

தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ள வழிக்கடவு என்று கிராமத்தில் இன்று அதிகாலை தன் மகள், 2 மகன்கள், மனைவி ஆகிய நால்வரையும் வெட்டிக் கொன்று விட்டு, கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வழிக்கடவு கிராமைத்தைச் சேர்ந்தவர் செய்யது அலி, இவரது மனைவி அசீனா(30) கூடலூர் அருகே நிலாக்கோட்டையைச் சேர்ந்தவர். இவர்களது மகன்கள் அன்சாரி(7), அபினாஷ்(4), மற்றும் மகள் மொய்சீனா(12) ஆவர்.
இவர்கள் அனைவரையும் வெட்டிக் கொன்று விட்டு செய்யது அலி, அங்கேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலைகளைச் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


   

0 comments:

Post a Comment