Thursday, May 3, 2012

புலிக் கொடியை வைத்து அரசியல் செய்யும் வாங்குரோத்து நிலையில் இன்றைய அரசாங்கம்....


சிங்கள மக்களிடம் தமது செல்வாக்கை தக்க வைத்துகொள்ள இவர்களுக்கு புலி, புலிக்கொடி என்ற வார்த்தைகளை தவிர வேறு எதுவும் எஞ்சி இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
தேசிய கொடியை சிங்கள மக்கள் சிங்க கொடி என்றுதான் பரவலாக கூறுகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், இந்த சிங்க கொடி என்ற தேசிய கொடியை கையில் எடுத்தது கூட இந்த அரசாங்கத்திற்கு ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக தெரியவில்லை. அந்த அளவுக்கு தமது சொந்த அரசியல் நோக்கங்கள் இவர்களது கண்களை திரையிட்டு மூடியுள்ளன.
எதிர்கட்சிகளின் ஊர்வலத்தில் புலிக்கொடி என்ற கதை, அரசாங்கத்தின் திட்டமிட்ட சதி என்பது சிறு குழந்தைக்கு கூட விளங்குகின்றது. ஊர்வலத்தில் புலிக்கொடி இருப்பதாக உடனடியாக அரச தொலைகாட்சியில் காட்டப்பட்டது. அதாவது இன்று நாட்டில் சட்ட விரோதமாக்கப்பட்டுள்ள, புலிகளின் கொடியை பிடிப்பவரை கண்டால், ஆளை பிடிப்பதை விட்டு விட்டு, அந்த காட்சியை அரச தொலைக்காட்சிகாரர்கள் படம் பிடித்துள்ளார்கள். இதன் பின்னணியை புரிந்து கொள்வது கஷ்டமானது அல்ல.


0 comments:

Post a Comment