Thursday, May 10, 2012

வீட்டை விட்டு ஓடினார் அனன்யா...


நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமான நாயகி அனன்யா, தனது வீட்டைவிட்டு சென்றுவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்து வரும் அனன்யா கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகிலுள்ள பெரும்பாவூரில் பெற்றோருடன் வசித்துவருகிறார்.
இவருக்கும் திருச்சூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஞ்சநேயன் என்பவருக்கும் பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு தான் ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணமான விடயம் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அனன்யாவின் பெற்றோர், திருமண மோசடி செய்ததாக ஆஞ்சநேயன் மீது பெரும்பாவூர் பொலிஸில் புகார் செய்தனர்.
விசாரணையில், ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்த ஆஞ்சநேயன் அவரிடம் இருந்து விகாரத்துக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தது தெரியவந்தது.
இதனால் இவர்கள் திருமணம் நடைபெறாது என்று அனன்யாவின் பெற்றோர் கூறிவந்தனர். ஆனால் அனன்யா, ஆஞ்சநேயனைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறிவந்தார்.
இது தொடர்பாக அனன்யாவுக்கும், அவரது பெற்றோருக்கும் பிரச்னை இருந்து வந்தது. இதற்கிடையில் ஆஞ்சநேயனும் அனன்யாவும் ரகசியமாக பேசி வந்தனர்.
இந்நிலையில், பெட்டி படுக்கையுடன் வீட்டை விட்டு வெளியேறி ஆஞ்சநேயனின் வீட்டுக்கே அனன்யா சென்றுவிட்டதாக கேரளாவில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அங்கிருந்து தான் தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பிற்க்கு அனன்யா சென்று வருகிறார். இந்தப் பிரச்னையால் அனன்யாவின் பெற்றோர் தங்கள் முடிவை மாற்றியுள்ளனர். ஆஞ்சநேயனுக்கே அனன்யாவை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
இதுபற்றி அனன்யாவின் அம்மா பிரஸிதா கூறும்போது நிச்சயதார்த்தம் முடிந்தவரின் வீட்டுக்கு அனன்யா சென்றதை எப்படி தவறு என்று கூற முடியும்.
இருவருக்கும் விரைவில் திருமணம் செய்து வைக்க இருக்கிறோம். இதுபற்றி மேலும் பேச விரும்பவில்லை என்றார்.


  

0 comments:

Post a Comment