Monday, May 7, 2012

கிளிநொச்சி முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கனடா வாழவைப்போம் அமைப்பு நிதியுதவி...


போருக்கு பின் முன்பள்ளி ஆசிரியர்கள் போரினால் பாதிக்கப்பட்ட நிலையிலும், அவர்கள் இம்மண்ணின் சிறார்களுக்காக பணியாற்ற முன்வந்தனர். அரசாங்க கல்வி நிர்வாக கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டபோதும், முன்பள்ளி ஆசிரியர்கள் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கும் கட்சிகளின் அரசியல் இலாபங்களுக்காக அலைக்கழிக்கப்படுவதுமாக முன்பள்ளிகளின் மகிழ்ச்சிகரமான சூழல் சீர்குலைக்கப்பட்டுள்ளன.
அவர்களின் ஆழ்மன மொழி உணர்வு, இன உணர்வு என்பனகூட வெளிக்காட்ட முடியாதவர்களாக அடக்கப்பட்டுள்ளனர். இந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு புலம்பெயர் தமிழ் சமுகம் உதவுதொகைகளை வழங்கத் தயாராக இருந்தபோதும், மாவட்ட முன்பள்ளி நிர்வாகம், அரச கட்சிகளின் ஆதரவுப் பொம்மைகளாக ஆட நிர்ப்பந்திக்கப்பட்ட நிலை இருப்பதால் பல வெளி உதவிகள் முன்பள்ளி ஆரிசியர்களின் கைகளுக்கு வராமல் திரும்பிவிட்டன என்பதுதான் உண்மை.
முன்பள்ளி ஆசிரியர்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை ஊட்டும்படியான வாக்குறுதிகளோ திட்டங்களோ இதுவரை அரசிடம் இருந்து வழங்கப்படவில்லை.எனவே இந்த ஆசிரியர்களின் வாழ்வில் இக்கட்டான இக்காலகட்டத்தில் புலம்பெயர் சமுகம் கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லா முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒரு சீரான தொடர் கொடுப்பனவு கிடைக்க முன்வரவேண்டுமென்பது தாயகத்தில் ஆவலாக இருக்கின்றது.
இது ஒரு குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கே கிடைக்கின்றது. இது அனைத்து ஆசிரியர்களுக்கும் கிடைப்பதற்காக நாங்களும் முயற்சித்து வருகின்றோம். இன்றைய சூழலில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்காங்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் அவர்கள் சவர்க்காரம் வாங்குவதற்கும் ஒருசில ஆடைகள் வாங்குவதற்கு மட்டுமே போதுமானது.






















0 comments:

Post a Comment