Thursday, June 28, 2012

திரையுலகில் கதாநாயகர்களுக்கே முக்கியத்துவம்: அசின் !


http://www.winjaffna.com/ அசின் நடித்த கஜினி, ரெடி, ஹவுஸ்புல் ஆகிய இந்திப்படங்கள் ரூ.100 கோடி வசூல் ஈட்டியுள்ளன. இதனால் ஹிட் படங்கள் நாயகி பட்டியலில் இடம் பிடித்துள்ளார். விரைவில் ரிலீசாக உள்ள போல்பச்சன் படத்துக்கும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அசின். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
http://www.winjaffna.com/எனது படங்கள் ஹிட்டாவதற்கு அதிர்ஷ்டம்தான் காரணம். வெற்றிக்கு நான் மட்டும் காரணம் அல்ல. படத்தில் பணியாற்றிய அனைவருக்குமே அதில் பங்கு உண்டு. என்னால்தான் படங்கள் ரூ.100 கோடி வசூல் ஈட்டின என்று சொல்ல முடியாது. அது மாதிரி கர்வப்படவும் மாட்டேன்.
http://www.winjaffna.com/சினிமாவில் கதாநாயகர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. அவர்களை முன்னிலை படுத்திதான் கதைகளையும் உருவாக்குகிறார்கள். இது வருத்தம் அளிக்கிறது. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் வர வேண்டும். கஹானி போல் நாயகிகளுக்கு 
முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் நிறைய வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். ஏற்கனவே நடித்த ஒரே மாதிரியான கேரக்டர் உள்ள கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க மறுத்துவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்
Enhanced by Zemanta

விஜய்யின் துப்பாக்கி படத்தை வெளியிட இடைக்கால தடை!



நடிகர் விஜய்யின் துப்பாக்கி படத்தை வெளியிட சென்னை சிட்டி சிவில் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை 2வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் நார்த் ஈஸ்ட் பிலிம் ஒர்க் நிறுவனம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் தமிழில் சினிமா படம் தயாரிக்க முடிவு செய்தோம். இதற்காக கள்ளத் துப்பாக்கி என்ற தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்தோம். கள்ளத்துப்பாக்கி படத்தை 2009ம் ஆண்டு முதல் தயாரித்து வருகிறேன். படத்தை இயக்குனர் லோகிதாஸ் என்பவர் இயக்கி வருகிறார். இந்த நிலையில் துப்பாக்கி என்ற பெயரில் கலைப்புலி தாணு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில், நடிகர் விஜய் நடித்துள்ளார். முருகதாஸ் இயக்குகிறார். இதுசம்பந்தமான விளம்பரம் பத்திரிகைகளில் வெளியானதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
 தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விதிமுறைகளை மீறி, நான் பதிவு செய்த கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பின் பின் பகுதியில் படத்தை தயாரித்து வருகிறார். எனவே துப்பாக்கி என்ற பெயரில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் முருகதாஸ் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருமகள், மனுதாரர் கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பில் படம் தயாரித்து விரைவில் வெளியிட உள்ளதாகவும், இந்த தலைப்பை 2009ம் ஆண்டு பதிவு செய்து, ஒவ்வொரு ஆண்டும் தலைப்பை புதுப்பித்து வருவதாகவும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். இப்போது துப்பாக்கி என்ற பெயரில் எதிர் மனுதாரர் தயாரிக்கும் படம் வெளியானால், தனக்கு இழப்பு ஏற்படும் என்றும், மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளதால், துப்பாக்கி என்ற தலைப்பில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் முருகதாஸ் ஆகியோருக்கு ஜூலை 16ம்தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்படுகிறது, என்று உத்தரவிட்டார்.

Enhanced by Zemanta

சொக்லேட் உற்சாகத்தை அளிக்கக்கூடியது !

 காலையில் எழும் போது ஏதாவது ஒரு விடயம் நம் மனதை பாதித்து விட்டால், அன்றைக்கு அவ்வளவு தான் எந்த ஒரு வேலையும் சரியாக நடக்காது. இவ்வாறான நேரத்தில் அது மனதை பாதிக்காத அளவிற்கு சில காரியங்களை செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

இசையில் மூழ்கினால் உற்சாகம் ஏற்படும், அதேபோல சொக்லேட் சாப்பிட்டாலும் மனம் உற்சாகமடையும் என்கின்றனர் நிபுணர்கள்.
காலையில் எழுந்ததும் காபி அல்லது டீ குடிப்பது பலரது பழக்கம். இது உற்சாகமூட்டும் பானம் என்பதால் இதனை குடிக்கின்றனர்.
மனம் கொஞ்சம் சரியில்லை என்றாலும் காபி, டீ குடிக்காலாமாம். இதனால் மனதில் ஏதேனும் சஞ்சலம் இருந்தாலும் மாறிவிடும்.

இசையில் மூழ்கினால் மனதில் எந்த வித கவலையும் குடியேறாது. சின்னதாய் அப்செட் ஆனாலும் மனதிற்கு பிடித்த பாடலை ஹெட் செட் போட்டு கேளுங்கள். மனம் உற்சாகமடையும்.
நல்ல நண்பன் இருந்தால் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. எப்பொழுதெல்லாம் மனம் கஷ்டப்படுகிறதோ அப்பொழுது எல்லாம் உங்களின் நண்பரிடம் பேசுங்கள். உற்சாகம் பிறக்கும்.

சொக்லேட் மிகச்சிறந்த உற்சாக மூட்டக்கூடிய உணவுப்பொருள். மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் டார்க் சொக்லேட் சாப்பிட்டால் அது மன அழுத்தத்தைப் போக்கும் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹோர்மோன் சுரப்பியை கட்டுப்படுத்துகிறதாம். அதுபோல சொக்லேட் சாப்பிடுவதால் உற்சாகம் ஆரம்பமாகிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

அதிகாலை வானம், பசுமையான காட்சிகள், விழும் அருவி, ஆர்ப்பரிக்கும் கடல் போன்ற இயற்கை அழகினை ரசித்தால் போதும் உற்சாகம் பிறக்கும்.


எப்பொழுது எல்லாம் மனதிற்கு பாதிப்பு ஏற்படுகிறதோ வண்டியை எடுத்து கொண்டு ஒரு ஜாலி ட்ரைவ் கிளம்புங்களேன்.

ராதாவின் இளைய மகள் மணிரத்தினத்தின் 'கடல்' படத்தின் நாயகி !

பழைய நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவரது இரண்டாவது மகளான துளசியும் சினிமாவுக்கு வருகிறார்.
மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் துளசி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதில் நாயகனாக நடிகர் கார்த்திக் மகன் கவுதம் அறிமுகமாகிறார். ஏற்கனவே இப்படத்தில் சமந்தாவை நாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தனர். ஆனால் கவுதமை விட மூத்தவராக இருந்ததால் ஜோடி பொருத்தம் இல்லை என்று அவரை மாற்றி விட்டு துளசியை தேர்வு செய்துள்ளனர்.
தனது தங்கை நடிகையானது குறித்து கார்த்திகா கூறியதாவது:-
துளசி பத்தாவது வகுப்பு படிக்கிறார். மணிரத்னம், ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் 'கடல்' படத்தில் நடிக்கிறார். இதுபோன்ற வாய்ப்பை யாரும் நழுவ விட மாட்டார்கள். துளசி தற்போது சென்னையில் இருக்கிறார்.
மணிரத்னமும் சுகாசினியும் தங்கள் குழந்தைபோல் பாவித்து துளசிக்கு நடிப்பு பயிற்சி அளிக்கின்றனர். நடிப்பு மட்டுமின்றி நடனம், வசன உச்சரிப்பு போன்றவற்றிலும் பயிற்சி பெறுகிறார். என் தாய் ராதா நடிகையாக இருந்தபோதும் அவர் எனக்கு நடிப்பு கற்றுக் கொடுக்கவில்லை. எனது பாணியில் இயற்கையாக நடிக்கவேண்டும் என்று கருதினார். அதுபோல்தான் துளசி விஷயத்திலும் எங்கள் தலையீடு இல்லை.



Enhanced by Zemanta

மேம்பாலத்தில் இருந்து தலைகுப்புறக் கவிழ்ந்த பேருந்து - சென்னையை கலங்க வைத்த விபத்து !

Posted Imageசென்னை நகரில் அரசு பயணிகள் பேருந்து பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 40-ம் மேற்பட்டோர் காயமடைந்தனர். இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சென்னையின் மையப்பகுதியான பாரிமுனையிலிருந்து வடபழனி நோக்கி 17-பி நம்பர் நகரப்பேருந்து சென்று கொண்டிருந்தது.

இன்று மதியம் 2 மணியளவில் சென்னை அண்ணாமேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது அப்போது பாலத்தில் இருந்து இறங்கி வளைந்து அருகில் இருக்கும் சர்வீஸ் ரோட்டில் செல்ல முயன்ற போது நிலை தடுமாறி கவிழ்ந்து கீழே சாலையில் விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பாலத்திலிருந்த கீழே விழுந்ததில் அதில் பயணித்தவர்கள் அலறினர்.

Posted Image

Enhanced by Zemanta