வெளிநாடுகளில் இருந்து வடக்கே செல்லும் இராஜதந்திரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், பொது அமைப்புகளும் வடக்கின் படைச்செறிவைச் சுட்டிக்காட்டுவதும், இராணுவத் தலையீடுகளற்ற இயல்பு வாழ்வு உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதும் வழக்கமானது தான்.
தாம் படைச்செறிவைக் குறைக்கவே கோருகிறோம் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விளக்கமளித்துள்ள போதும், அரசாங்கம் அதைக் கண்டுகொள்வதாக இல்லை.
அதேவேளை, கடந்தவாரம் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க "ஐலன்ட்" டுக்கு அளித்த பேட்டியில், 2009 டிசம்பர் 17ஆம் திகதி தான் பதவியேற்ற போது யாழ். குடாநாட்டில் 27 ஆயிரம் படையினர் நிலைகொண்டிருந்ததாக கூறியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு அவர் கண்டிக்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளார்.











0 comments:
Post a Comment