Sunday, June 3, 2012

வடக்கு படைச்செறிவு குறித்த உண்மையும் பொய்களும்...


வெளிநாடுகளில் இருந்து வடக்கே செல்லும் இராஜதந்திரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், பொது அமைப்புகளும் வடக்கின் படைச்செறிவைச் சுட்டிக்காட்டுவதும், இராணுவத் தலையீடுகளற்ற இயல்பு வாழ்வு உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதும் வழக்கமானது தான்.
"வடக்கும் இலங்கையின் ஒரு பகுதி தான், நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே அங்கும் படைகளை நிறுத்தியுள்ளோம்" என்று முகத்தில் அறைந்தாற்போல ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால் அரசாங்கம் வடக்கு படைக்குவிப்பை எந்தவகையில் நியாயப்படுத்தினாலும், இந்த விவகாரம் இப்போதைக்கு ஓய்ந்து விடப் போவதில்லை. காரணம், நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்று வடக்கிலும் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் என்ற அரசின் வாதத்தை யாரும் நம்பத் தயாராக இல்லை. அதேவேளை, வடக்கில் உள்ள தமிழ்மக்கள் படைக்குறைப்பை வலியுறுத்தவில்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான் அதை வலியுறுத்துகிறது என்று பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்‌ஷவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், கூட்டமைப்பு படைவிலக்கலை வலியுறுத்தவில்லை.
இலங்கையின் சனத்தொகையில், 22 இல் ஒரு பங்கு மக்கள் வாழும் வடக்குப் பகுதியில் இராணுவத்தின் பெரும்பகுதி நிலைகொள்வதை சாதாரணமான படைக்குவிப்பாக எடுத்துக்கொள்ள முடியாது.
யாழ்ப்பாணத்தில் மட்டும் 51, 52, 55 என இராணுவத்தின் 3 டிவிஷன்கள் நிலை கொண்டுள்ளன. ஒரு டிவிஷன் என்பது சுமார் 10 ஆயிரம் படையினரைக் கொண்டது. ஆனால் இலங்கை இராணுவத்தில் ஒரு டிவிஷனில் சுமார் 8000 படையினரே உள்ளனர். மூன்று டிவிஷன்களையும் சேர்த்தால், அங்கு 24 ஆயிரம் படையினர் இருக்க வேண்டும்.
2002இல் போர்நிறுத்த உடன்பாடு நடைமுறைக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் பிரச்சினைகளை தீர்க்கும் சந்திப்புகள் தொடங்கின. முகமாலையிலும், ஓமந்தையிலும் முக்கியமான சந்திப்புகள் ‹னியப் பிரதேசத்தில் நடந்தன. முகமாலையில் நடந்த சந்திப்பின் போது, யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயங்களை விலக்க வேண்டும் என்று புலிகள் கோரினர்.
இந்தச் சூழலில் இந்திய இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சதீஸ் நம்பியாரை அரசாங்கம் அழைத்து வந்தது. அவரும் சரத் பொன்சேகாவுக்கு சார்பாக அறிக்கையைக் கொடுத்தார்.
அதன்விளைவாக இராணுவ மட்டப் பிரச்சினைகளைத் தீர்க்கும் சந்திப்புகளில் தமது தளபதிகளை ஈடுபடுத்தும் முடிவை புலிகள் கைவிட்டனர். அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட அதுவும் ஒரு காரணமாகியது.
அதுபோலத் தான் இப்போதைய படைக்குறைப்பு விவகாரத்தையும் கருதத் தோன்றுகிறது. ஆனால் இப்போது ஒரு வித்தியாசம். அப்போது இந்தியாவில் இருந்து வந்த மேஜர் ஜெனரல் சதீஸ் நம்பியார் உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்கக் கூடாது என அரசுக்கு ஆலோசனை கூறினார்.இப்போது இந்தியா, அமெரிக்கா எல்லாமே படைகளை குறையுங்கள் என்கின்றன.
இதைச் சொல்லியதால் தான், இங்கிலாந்து தூதுவர் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.

0 comments:

Post a Comment